எதிரெதிர் வேட்பாளராக போட்டியிடும் கணவன் – மனைவி
அரியலூர் மாவட்டம் மேல கருப்பு ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணவன்-மனைவி இருவரும் எதிரெதிர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இது என்ன சிறப்பு என்றால் மனைவிக்காக தன் சின்னத்தை மறைத்து கணவரும் வாக்கு சேகரித்து வருகிறார்.
மேல கருப்பூர் கிராம ஊராட்சி பதவிக்கு அந்த கிராமத்தை சேர்ந்த முத்துசாமியும் அவரது மனைவி சாந்தியும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தனது சின்னத்தை மறைத்து மனைவி சாந்திக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வேட்பாளர் முத்துசாமி.





