சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழப்பு..!
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததை அடுத்து மாநகரில் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மனிதர்களுக்கும் பரவக்கூடிய இந்த ஆபத்தான நோயை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.





