--- --:--:-- --

டெட் தேர்வு 2026: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

9

மிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 2015 செப்டம்பர் 1-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகப் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தகுதித் தேர்வினை எழுதியே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கான விண்ணப்பப் பதிவு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கியது. தற்போது பணியில் இருக்கும் ஏராளமான ஆசிரியர்கள் இதற்காக விண்ணப்பித்து வரும் நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைகிறது. எனவே, கடைசி நேரத் தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதியுள்ள ஆசிரியர்கள் உடனடியாகத் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்கான திருத்தப் பணிகளை மேற்கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் நாளை முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்களை இணையதளம் வாயிலாகவே செய்துகொள்ளலாம். திட்டமிட்டபடி, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வானது வரும் ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Right Menu Icon