வடிகாலில் விழுந்து பெண் பலி – “இயற்கைக்கு மாறான மரணம்“
சென்னை, சூளைமேட்டில் பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா என்ற பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.






