இலவச புத்தகங்களை விற்கும் தனியார் பள்ளிகள்
அரசு வழங்கும் இலவச புத்தகங்களை பணத்திற்கு சில தனியார் பள்ளிகள் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொழிப் பாடமான தமிழ் புத்தகத்தை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு இலவசமாகவே அளிக்கிறது.
ஆனால் இந்த புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக அளிக்காமல், ₹100 முதல் ₹150 வரை பணம் பெற்றுக் கொண்டு தனியார் பள்ளிகள் விற்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




