நாளை முதல் ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில்!
ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் நேரடியாக மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. பாம்பனில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து, ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் அங்கிருந்து தாம்பரத்திற்கு மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். இனி நேரடியாக ராமேஸ்வரம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






