கோயில் விழாவில் யானைகளை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு..!
கோயில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாகக் கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகக் கேரளாவில் கோயில் விழாக்களில் அடுத்தடுத்து யானைகள் தாக்குதலுக்கு ஆளாகி மனித உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோழிக்கோட்டில் நடந்த ஊர்வலத்தின் போது யானைகள் மிரண்டு ஓடியதில் 2 பெண்கள் உட்பட மூவர் பலியானது கவனிக்கத்தக்கது.





