சாலையில் கழன்று ஓடிய லோடு வேனின் சக்கரம்..!
மதுரவாயலில் லோடுவேன் சக்கரம் திடீரென சாலையில் கழன்று ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை திருவேற்காட்டில் இருந்து அனீஸ் என்பவர் லோடு வேனில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு மதுரவாயில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வேனின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது. இதனால் லோடுவேன் சாலையின் நடுவே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





