மதுரை அரசு ஹாஸ்பிடலில் அதிர்ச்சி..கதறி அழும் நோயாளிகள்..!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்களும் செவிலியர்களும் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இங்கு போதிய மருத்துவ வசதி உபகரணங்கள் இல்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் அழைப்பதிலும் தாமதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





