செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ஜன.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 44இல் இருந்து 2000ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என ஒய்.பாலாஜி என்பவர் வழக்குத்தொடர்ந்தார். இதற்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.





