கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.