என்னடா பண்ணி வச்சிருக்க என் குழந்தையை..கிளினிக்கில் விடப்பட்ட நாய் மரணம்..கதறிய உரிமையாளர்..!
கோபி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சஞ்சு காலனி கிளினிக்கில் மருத்துவர்கள் பராமரிப்பில் ஒரு நாள் விடப்பட்ட வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.
கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் தனது தங்கை திருமண வருகை நிகழ்த்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் புறப்பட்டுக்கொண்டு வளர்ப்பு நாயையும் பராமரிப்பில் வைக்க 1,200 ரூபாய் கட்டணம் செலுத்தியவுடன் நாயை விட்டு சென்றார்.
அன்று மாலையை சரத்தை தொடர்பு கொள்ள தனியார் கிளினிக் நிர்வாகி நாயின் உடல்நிலை பாதித்ததால் உடனடியாக வருமாறு கேட்டுக் கொண்டார். குடும்பத்தினர் விரைந்து சென்ற பார்த்தபோது நாய் சடலமாக கிடந்ததால் கதறி அழுதனர்.






