உலகப் பொது மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்..!
உலக பொது மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரி ஆனந்தன் தங்களை உலக பொது மொழியாக வேண்டும் என்றால் ஐக்கிய பொது சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.






