பாஜக முக்கிய தலைவர் சி.பி.யோகஸ்வர் ராஜினாமா
கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த அவர், நாளை அல்லது நாளை மறுநாள் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைய உள்ளதாகவும், சன்னபட்னா தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.






