பதவி விலகத் தயார்: மம்தா
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என நம்புவதாகவும் வேதனை தெரிவித்தார். மருத்துவர்கள் போராட்டம் முடியாததால், மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.





