திருப்பூரில் இந்து முன்னணி ஊர்வலத்தில் மோதல்..!
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 நாட்களாக வழிபாடு நடத்தி வந்த நிலையில் நேற்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் எம்.எஸ்.நகர் பகுதியில் வரும்போது இந்து முன்னணியின் இருவேறு பகுதி இளைஞர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.





