100 மீட்டர் செல்வதற்குள் திடீரென சக்கரம் பழுதாகி நடுவில் நின்ற தேர்..!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வெகு விமர்சியாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் புறப்பட்டு 100 மீட்டர் செல்வதற்குள் தேரின் சக்கரம் திடீரென பழுதானதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடுவழியில் நின்றது. தொடர்ந்து இரண்டு சக்கரங்களை மாற்றிய பின் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்றது.





