பணி முடிந்து வீடு வந்த பெண்..திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு..!
சென்னையில் பணிக்கு செல்லும் பொழுதுதிடீரென மயங்கி விழுந்து பெண் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரா.
இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி நிமித்தமாக தடை அறிவியல் துறைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பெண்ணை பரிசோதனை செய்ய மறுத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





