திருச்சி விமான நிலையத்தில் கொந்தளித்த பயணிகள்..!
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் கோபமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இன்றும் சிங்கப்பூர் துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.





