மதுரை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..!
மதுரை தெப்பக்குளத்தில் இரண்டாவது நாளாக கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை ஆற்று பகுதியில் இருந்து கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்லப்படும் நீரில் கழிவு நீர் கலந்து செல்வதால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மீண்டும் மீன்கள் செத்து மிதப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.





