ரன்வீர் உடன் காதல் ஆனால் மற்ற ஆண்கள் உடன் அது நடந்தது!.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் பல உறவுகளில் இருந்து வந்துள்ளேன்.
ஆனால் எந்த விதமான உறவுச் சிக்கல்களிலும் சிக்காமல் என் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டிய ஆசை எனக்கு இருந்தது. ரன்வீர் என் வாழ்க்கையில் வந்த பிறகு எத்தனை ஆண்களை சந்தித்தாலும் மீண்டும் ரன்வீரைத் தேடி செல்ல தோனுகிறது என்று தீபிகா கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய ரன்வீர், நாங்கள் காதலித்து கொண்டு இருக்கும் போது இரண்டு பேர் தீபிகா பின் சுற்றினார்கள் என்று ரன்வீர் சொல்ல, உடனே கரண் ஜோகர் யார் அந்த இரண்டு பேர்? என்று கேட்டார்.
அதுக்கு தீபிகா அதை நான் மறந்துவிட்டேன் என்று சொன்னார். அருகில் இருந்த ரன்வீர் ஆனால் எனக்கு யார் என்று தெரியும் என கூறினார். பதிலுக்கு தீபிகா நாம் இது தொடர்பாக பிறகு பேசலாம் என சிரித்துக் கொண்டே பேச்சை மாற்றினார். தற்போது தீபிகாவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




