முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு.. சிறைக்கு சென்ற பாஜக பிரமுகர்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் செல்வபாலன் என்ற இளைஞர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.





