ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்க தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. பணிச்சுமையை ஈடு செய்ய ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி, கரிஷ் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா வழங்கப்படும் எனவும் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.





