கல்யாணம் செய்துவிட்டு ஏமாற்றும் சீரியல் ஹீரோ மீது நடிகை புகார்..!
2017ம் ஆண்டு கேளடி கண்மணி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ். இவர்கள் இருவரும் சீரியல் நடிக்கும் போது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் பதிவு திருமணம் செய்துள்ளார்கள், இதனை ரகசியமாக வைத்த அவர்கள் கடந்த சில வாரத்திற்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.நடிகை திவ்யா திடீரென மருத்துவமனையில் இருந்து ஒரு அதிர்ச்சி வீடியோ வந்துள்ளது. கணவர் தன்னை அடித்ததில் தனக்கு வயிற்றில் அடிபட்டதாகவும், பின்னர் காலால் மிதித்ததில் மயக்கம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மயக்கம் தெளிந்து பார்க்கும் போது கணவர் அங்கே இல்லை. பின் வயிற்று வலி ஏற்படடு பிளீடிங் ஆக ஆரம்பித்ததால் மருத்துவமனை வந்துள்ளதாக கண்ணீர் மல்க செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




