கருக்கலைப்பின் போது பெண் உயிரிழப்பு..! மருத்துவமனைக்கு சீல்..!
கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அஸ்வினி என்ற தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அஸ்வினி மருத்துவமனையில் கடந்த ஒன்றாம் தேதி அனுமதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பு சிகிச்சையில் இறந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அஸ்வினி என்ற தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.





