கர்நாடகாவில் கால்வாயில் வீசப்பட்ட 7 சிசுக்கள்..!
கர்நாடகாவில் 7 சிசுக்களின் கரு பாட்டில்களில் அடைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட பேருந்து நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் கருக்கள் இருந்துள்ளன.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கால்வாயில் இருந்து ஐந்து பாட்டில்களில் கரு இருப்பது தெரியவந்ததை அடுத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் பாலினம் கண்டறிதல் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் இந்த கால்வாயில் வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது.





