ஊருக்குள் புகுந்த 9 அடி நீளமுள்ள அரிய வகை மஞ்சள் உடும்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஊருக்குள் புகுந்த 9 அடி நீளமுள்ள அரிய வகை மஞ்சள் உடும்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குமாரபுரம் காலனியில் இரவு நேரத்தில் சற்று பெரிய அளவிலான உடும்பை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அதை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 9 அடி நீளம் கொண்ட டிராகன் வகையை சேர்ந்தது என்று கூறிய வனத்துறையினர் குமரி மாவட்டத்தில் மட்டும் இந்த வகை உடும்பு அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்தனர்.







