வனப்பகுதியில் பற்றி எரியும் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு..!
பெரு நாட்டில் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டர்ஸ் மலை பகுதியில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் மீட்புப் பணியினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் தீ விபத்து நடக்கும் இடம் அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை.







