சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!
உத்திரபிரதேசத்தில் வீடு இடிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் தொகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீட்டின் மேற்கூறை இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






