தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.பி.எஸ் மீண்டும் வலியுறுத்தல்
மேகதாது அணைக் கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
“தண்ணீர் திறக்க முடியாது” என்று கர்நாடக முதல்வர் கூறிய பிறகும், தமிழ்நாடு முதலமைச்சர் பேசாமல் வாய்மூடி மௌனியாக உள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் வலியுறுத்தியும் கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




