நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி ஆலோசிக்க முடியாது!

க்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின்போது இன்று விளக்கமளித்து பேசினார். இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் வாக்கு பதிவில் ஈடுபட வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அமித் ஷா, நாட்டில் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

 

நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி ஆலோசனை செய்ய முடியாது என அப்போது கூறிய அவர், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பேச முடியும். அது அரசின் பார்வைக்குள் வரும். அதனால், உடனடியாக இந்த ஆலோசனையை அரசு ஏற்று கொண்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டால், யார் அதற்கு பதிலளிப்பார்கள்? என்றார்.