--- --:--:-- --

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப எச்சரிக்கை..!

5

போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார். நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon