குப்பைத் தொட்டியுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) குப்பை என கூறி எதிர்க்கட்சிகள் இன்று குப்பைத் தொட்டிகளுடன் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்கவே SIR கொண்டு வரப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை நம்பகமான ஆவணங்களாக கருத முடியாது என தேர்தல் ஆணையம் கூறியதையும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





