சபரிமலையில் வரும் 11-ம் தேதி நடை திறப்பு..!
சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கு முன்பாக வரும் ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மாளிகைபுரம் கோயிலின் இடதுபுறத்தில் இருக்கும் நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் மாற்ற தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்காகவே கோயில் நடை 11-ம் தேதி திறக்கப்பட்டு, 12-ம் தேதி நவக்கிரக பிரதிஷ்டை செய்யப்பட்டு 13-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




