திருவண்ணாமலையில் சாலையில் ஓடிய 20 ஆயிரம் லிட்டர் டீசல்..!
திருவண்ணாமலையில் விபத்தில் சிக்கிய டீசல் லாரியில் இருந்த டீசல் சாலையில் ஆறாக ஓடியது. திருவண்ணாமலை அடுத்த பெரிய கோலப்பாடி கிராமத்தில் வந்த டீசல் லாரியும், சரக்கு வாகனமும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் லாரி கவிழ்ந்ததில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் சாலை ஓரத்தில் ஆறு போல ஓடியது. இதனை பார்த்த கிராம மக்கள் கொஞ்சம் ஆபத்தை உணராமல் டீசலை பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





