மீட்பு குழுவினருக்கு ஃபுட் பாய்சன்..!
வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு, ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னார்வலர்கள் வழங்கிய உணவை சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னார்வலர்கள் வழங்கும் உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




