ரத்த வெள்ளத்தில் கிடந்த தலை.. உடல் எங்கே?
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்து தலையை துண்டித்து சாலையில் வீசி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குள்ளம்பட்டி பிரிவினோடு பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவில் ஆண் தலை ஒன்று துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடப்பதாக காரைக்கட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற தலையை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார் தலையை துண்டித்தது வீசி சென்றவர்கள் யார்? எங்கே? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





