மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்..!
மாணவர்கள் கல்வியுடன் கைத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வளாகத்தில் திரைப்பட விழாவில் ஜப்பான் செல்லும் மாணவர்களை அமைச்சர் சந்தித்து வாழ்ந்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் சிறார் திரைப்பட விழாவில் பல்வேறு போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ளதாக தெரிவித்தார். மாணவர்களுக்கு கல்வி அவசியம் என்று கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





