8 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என பலர் இறப்பு பற்றிய செய்தியை நாம் செய்திகளில் பார்க்கிறோம். இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணம் கொரோனா கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நிலையில் மலையாள சின்னத்திரையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகையும், மருத்துவருமான பிரியா 35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
நடிகர் கிஷோர் சத்யா தனது சமூக வலைத்தள கணக்குகளில் தனது ரசிகர்களுக்கு நெஞ்சை பதற வைக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், ”மலையாளத் தொலைக்காட்சித் துறையில் மேலும் ஒரு எதிர்பாராத மரணம்.
டாக்டர் பிரியா நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை ஐசியூவில் உள்ளது. வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




