தொண்டையில் சிக்கி கொண்ட ஸ்டாப்ளர் பின்..!

தின்பண்டங்கள் மீது ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க கோரி பள்ளி மாணவன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடலை, பட்டாணி உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் பைகளை அடைத்து அதனை நூதன முறையில் எடுத்துக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஒரு மாணவன் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

 

அந்த மனுவில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கடலை பாக்கெட் வாங்கி சாப்பிட்டதாகவும் அதிலிருந்த ஸ்டாபிலர் பின் தொண்டையில் சிக்கி கடும் வலியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தான்.

 

எனவே சிறுவர்கள் தின்னும் தின்பண்டங்களை விற்பனை செய்வதில் ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.