பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி சீட் ஒதுக்குவதாக குற்றச்சாட்டு..!

டெல்லி மாநகராட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் ஆம் ஆத்மி பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் ஆம் ஆத்மி பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வழங்குவதாக பாஜக குற்றம் சாட்டி வந்தது.

 

இந்த நிலையில் அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சீட்டு ஒதுக்கியதாக ஆம் ஆத்மி எம் எல் ஏ குலாப் சிங் யாதவ் அந்த கட்சியினரால் தாக்கப்படுவதும் பதிவாகியுள்ளது.