அதிமுக அலுவலகத்திற்கு சீல்.! இன்று உத்தரவு..!
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த சமயத்தில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறையானது.
இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார் புதன்கிழமை 2.15 மணிக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




