கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்..!

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் சூழலில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

6 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.