ஒரு சீட் கூட பாஜக கேட்கவில்லை..!
நாகை நகராட்சிக்குட்பட்ட முப்பத்தி ஆறு வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக இதுவரை ஒரு சீட்டு கேட்டு கூட வரவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து அதிமுக சார்பாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.
ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் நாகை நகராட்சிக்குட்பட்ட முப்பத்தி ஆறு வார்டுகளை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ எஸ் மணியன் அதிமுகவை விமர்சித்து பேசிய பாஜக நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நாகரீகமான அரசியல் வாதி பேசக்கூடிய வார்த்தை இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





