ஒரே வாரத்தில் 9 மடங்கு தொற்று அதிகரிப்பு.!
நாடு முழுவதும் மூன்று மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 ஆயிரத்து 750 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1.3 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இது சுமார் மூன்று மடங்கு அதிகம் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் 5 மடங்கு, மேற்குவங்கத்தில் 5 மடங்கு, டெல்லியில் 9 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





