மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு நாற்பத்தி ஒரு நாள் பூஜைக்கு பின் கடந்த 26ஆம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதிதரிசனத்தை திரளான பக்தர்கள் காண்பார்கள். புத்தாண்டிற்கு பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தடுக்க கேரளாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் சபரிமலை பக்தர்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
தேர்வு எழுதிவிட்டு திரும்பிய 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் பலி..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!