தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் எனக்கூறியுள்ள சசிகலா..!
தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஆதரவாளர்களை சசிகலா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ரூபம் வேலப்பன் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில் கொரொனா ஊரடங்கு காரணமாக தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்று கூறியிருக்கும் சசிகலா தாங்கள் இருக்கும் பகுதிகளில் மக்கள் நலத் திட்ட உதவிகளை செய்யுமாறு கூறியுள்ளார். சசிகலாவின் பிறந்த நாள். ஆகஸ்டு 18ஆம் தேதி வருவது குறிப்பிடத்தக்கது






