4 காரில் பணத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி..!
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஓமனில் தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் கைப்பற்றியதும் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது நான்கு கார்களில் நிரப்பிய பணத்தை ஹெலிகாப்டரில் ஏற்றுக்கொண்ட நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக காவலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. எண்ண முடியாத அளவுக்கு பணம் அதிகம் இருந்ததால் எஞ்சியதை அலுவலகத்தில் அஷ்ரப் கனி விட்டு சென்றதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் அவர் தஜகஸ்தான் சென்றதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அந்த நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது. அந்த நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஓமனில் உள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.






