அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது..!
இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அனைத்து குடும்பங்களுக்கும் தேவை என்ற சூழல் இருக்காது என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே தகுதி உடையவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை கனிமொழி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள் மற்றும் கலைத் துறையினரே இழிவுபடுத்தும் செயல் என்று தெரிவித்தார் தற்போது இளம் இயக்குனர்கள் பலர் நல்ல கருத்துக்களை திரைப்படங்களில் தெரிவித்து வருவதாக கனிமொழி பாராட்டு தெரிவித்தார்.






