என் நினைப்பு எல்லாம் என் தோழி பவானியை பற்றியே உள்ளது..!
தான் ஏற்படுத்திய கார் விபத்தில் உயிரிழந்த பவானி நினைப்பே எப்பொழுதும் உள்ளதாக நடிகை யாஷிகா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 24ஆம் நாள் நடிகை யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் அவரது நெருங்கிய தோழி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஒரு நொடியில் விபத்து குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதுக்கு தான் பொறுப்பு ஏற்பதாகவும் பவானி நினைப்பே உள்ளதாகவும் அதனால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு மது அருந்தாமல் தான் வண்டி ஓட்டுவதை தெளிவுபடுத்திய போதும் மற்றவர்கள் புறம்பேசுதல் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






